மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Published by
பாலா கலியமூர்த்தி

ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேகொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தேவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரும் 24ம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்றும் மீண்டும் முழு ஊரடங்கு நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11 முதல் கிடைக்கும் என்றும் தமிழகத்திற்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக ஸ்டெர்லைட் உறுதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் உற்பத்திக்காகவும், அதை பெறுவதற்க்காகவும் அதிகாரி நியமிக்கப்படுவார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், ஊரடங்கை அமல்படுத்த தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று பரவல் சங்கிலி அறுவப்படுவதில் தான் ஊரடங்கின் வெற்றி உள்ளன. தொழித்துறையினரின் கோரிக்கை குறித்து அடுத்தகட்ட அறிவிப்பை முதல் வெளியிடுவார் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

49 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

2 hours ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

3 hours ago