என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்! – கமலஹாசன்

Default Image

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏவுகணை நாயகனான அப்துல்கலாம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்ற பெருமைக்குரிய தலைவர்  ஆவார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற  நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். அவருடைய சாதனைகளும், தொலைநோக்குப் பார்வையும், நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும், நினைவும், நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

goat vijay gbu ajith
kl rahul kantara
Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi