அடுத்த 48 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் உட்பட்ட சில பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்