25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. ! குழந்தையை கடத்திய இளம்பெண் கைது.!

Published by
murugan
  • கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மஹாராஷ்டிரா தம்பதி குழந்தையை கடத்தி சென்றார்.
  • இன்று கடத்திய பெண் ,குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்தபோது அப்பெண்ணை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

மஹாராஷ்டிராவை சார்ந்த ஜானே போஸ்லே -ரந்தோஷ் தம்பதிக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் மெரினா மணற்பரப்பில் தாங்கி பலூன் விற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இந்த தம்பதியை அப்பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார்.

குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக் கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு அந்த இளம் பெண் குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுள்ளார். பின்னர்  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்த காவல் நிலையத்தில் அந்த தம்பதி புகார் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர பூக்கடை காவல் துறை 5 தனிப்படைகள் அமைத்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்  சொல்லும் வழி முழுவதும் 25-க்கும்  மேற்பட்ட சிசிடிவி ஆய்வு செய்தனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை அப்பெண் செல்லலும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது.அந்த சிசிடிவி காட்சிகள் மருத்துவமனைக்கு செல்லும் காட்சிகளும் கிடைத்ததை வைத்து போலீசார்  மருத்துவமனையில் அங்கே காத்திருந்தனர்.

இந்நிலையில்  இன்று கடத்திய பெண் ,குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்தபோது அப்பெண்ணை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய பெண் யார் என்ற விவரங்களை காவல்துறை பின்னர் தெரிவிப்பதாக கூறினார்கள்.

 

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

58 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago