புறம்போக்கு நிலங்கள்:நில உரிமை மற்றும் இரயத்துவாரி என மாற்றம்;9 பேர் கொண்ட குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!

Published by
Edison

அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,மெட்ரோ ரயில்வே திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் நிலம் கையகப்படுத்துதல், நில எடுப்பு,பயன்பாட்டுகளின் திசை திருப்புதல், திட்டத்தால் பாதிக்கப்பட்டவரின் மறு வாழ்வு. உள்துறை மற்றும் உள்நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களிடமிருந்து அனுமதி ஆகியவை குறித்து தீர்வு காணும் நோக்கில், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு அமலாக்கு துறை, உயர்மட்ட குழு (High Power Committee) அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஆட்சேபனையுள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நிலவுரிமை மாற்றம் செய்வது குறித்து முடிவெடுத்திட செயலாக்க குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதே குழுவினர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு நிலவுரிமை மாற்றம் செய்வதிலும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் தக்க உத்தரவுகளை பெற்றுத் தரவும் 9பேர் கொண்ட இக்குழு செயல்படும்.குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. அரசு முதன்மைச் செயலாளர்,நிதித்துறை – உறுப்பினர்.
  2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,தொழில் துறை – உறுப்பினர்.
  3. அரசு முதன்மைச் செயலாளர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை –  உறுப்பினர்.
  4. அரசு செயலாளர்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – உறுப்பினர்.
  5. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் – உறுப்பினர்.
  6. நில நிருவாக ஆணையர் – உறுப்பினர்.
  7. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT) -உறுப்பினர்.
  8. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) –  உறுப்பினர்.
  9. மேலாண்மை இயக்குநர் ,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) -உறுப்பினர்.

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

32 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

45 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago