‘நம் புரட்சி தொண்டன்’.. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

“நம் புரட்சி தொண்டன்” என்ற நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜை நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சியில் புரட்சி மாநாடு நடைபெற்ற நிலையில், அடுத்ததாக எந்த மாவட்டத்தில் நடத்தலாம்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், “நம் புரட்சி தொண்டன்” என்ற தினசரி நாளிதழை, புதிதாக தொடங்கவுள்ளதாக தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர் ராமச்சந்திரன் கூறுகையில், பாஜவுடன் தோழர்களாக இருக்கலாம், அக்கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியாது. வேண்டுமென்றால் நம்முடன் வரட்டும், அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. பகைத்து கொள்ளவும் தேவையில்லை. நமக்கு தொண்டர்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

54 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

2 hours ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

3 hours ago