சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைப்பு-அமைச்சர் மதிவேந்தன்..!

Published by
Sharmi

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையிலான முதல் ஆய்வு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், 18 மாத காலமாக கொரோனாவால் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் சரிவை சந்தித்துள்ளனர். இதை சரி செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் முக்கிய அடையாளமாகும். அதனால் இந்த இடத்தை இரவிலும் சிறப்பாக காணக்கூடிய வகையில் சீரொலி சீர்மிகு காட்சி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சோழர்களின் தலைநகரமாக விளங்கும் பூம்புகார் நகரின் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா காரணத்தால் தமிழகத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதலமைச்சரிடம் ஆலோசனை செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் இதை சீரமைக்கும் முயற்சிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

14 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

32 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

50 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago