தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் – உடல் உறுப்பு தானம் செய்வதற்கான படிவத்தை அமைச்சரிடம் ஒப்படைத்த திரைத்துறையினர்..!

Published by
லீனா

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், மூளை சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலு, தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். தமிழகத்தில் முதல் முறையாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நடிகர் சியாம் செல்வன் உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைத்துறை இயக்குனர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நாயகன் சியாம் செல்வன், நாயகிகள் நக்‌ஷா சரண், ரக்‌ஷனா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குரிய படிவங்களை இன்று காலை நம்மிடத்தில் ஒப்படைத்தனர் மனிதநேயம் மிக்க அவர்களுடைய இச் செயல் பாராட்டுக்குரியது மற்றவர்களுக்கு முன்னுதாரணமானது.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இபிஎஸ் தலைமையில் ஜெ. பிறந்தநாள் விழா! மீண்டும் செங்கோட்டையன் ‘ஆப்சென்ட்’!

சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…

5 minutes ago

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில்,  டோமலபெண்டா…

57 minutes ago

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

2 hours ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

2 hours ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

2 hours ago

LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…

3 hours ago