விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞர்… தன் உயிரை கொடுத்து எட்டு பேரின் உயிரை மீட்ட கர்ணன்.

Published by
Kaliraj
  • விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞர்.
  • உடலுறுப்பை தானமக வழங்கி பலரின் உயிரை காத்த மனம் நெகிழும் சம்பவம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும்  ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பெயர் சரத்குமார்,இவரது வயது  23.இவர்  சிவகங்கையில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை வழக்கம்போல பணி முடிந்து இளையான்குடி ரோடு வழியாக தனது இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு செல்லும் போது அதிகரை விலக்கு ரோட்டில் நிலைதடுமாறி அவரது இருசக்கர  வாகனம் விபத்துக்குள்ளானது.இதில்  பலத்த காயமடைந்த  அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Image result for மூளைச்சாவு அடைந்த சரத்குமார்

அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக  தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் உடலுறுப்பு தானம் குறித்து விளக்கவே,  சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது  பெற்றோர்கள்  சம்மதித்தனர்.இதை தொடர்ந்து,  மதுரை, சென்னை மருத்துவக்கல்லுாரி டீன்கள் மூலம் அவரது உடலுறுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் இதயம்  விமானம் மூலம் சென்னைக்கும், சரத்குமாரின் கண்கள் திருச்சிக்கும், அவரது சிறுநீரகங்கள் மதுரை மற்றும்  தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம்  மறைந்த சரத்குமார் எட்டு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இதில், சரத்குமாரின் கல்லீரல் கோயமுத்தூர்  மெடிக்கல் சென்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

 

எனவே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு சரத்குமாரின் கல்லீரல் எடுத்து வரப்பட்டது. கோவை வட்டமலையாம் பாளையத்தில் பத்திரமாக  தரையிறங்கி அங்கிருந்து கல்லீரல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும், போக்குவரத்தை நிறுத்தி சீர்மிகு காவல்துரையினர் எந்த  தடையின்றி செல்ல வழி செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சரத்குமாரை நினைவு கூற வைத்துள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி… 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.!

ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…

5 hours ago

ஒரே ஓவரில் 6,6,6,6,4… மெய் சிலிர்க்க வைத்த பூரன்.! 600 சிக்ஸர்களுடன் புதிய சாதனை…

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…

5 hours ago

DC vs LSG : ஆரம்பத்தில் மாஸ்.., இறுதியில் சரிந்த லக்னோ.! பவுலிங்கில் மிரட்டிய டெல்லிக்கு இது தான் இலக்கு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

DC vs LSG: லக்னோ அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல்… ஓஹோ இது தான் விஷயமா.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…

7 hours ago

“விஜயை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது”- டிராகன் இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு.!

சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…

8 hours ago

DC vs LSG : களமிறங்கும் புதிய கேப்டன்கள்… டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு.!

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

9 hours ago