நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு போதும், கூட்டம் நடத்த தேவையில்லை!

Default Image

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசின் உத்தரவு போதும், செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை என துரை முருகன் கூறியுள்ளார்.

நேரடி நெல் கொழுத்தால் நிலையங்களை திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சரிகையை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்து அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விற்பனை செய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும், 17% ஈரப்பதமுள்ள நெல்லை வீணாக்காமல் ஈர்ப்பத்துக்கு சலுகை அளித்து தினமும் 1000 குவிண்டாக்கள் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசு உத்தரவு அளித்தால் போதும் எனவும், இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்களை கூட்ட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்