8 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் !! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published by
அகில் R

சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர்.

ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் சில இயங்கி வருவதால் அதில் பணிபுரியும் சில தகுதி இல்லாத பராமரிப்பாளர்களால், செல்லப்பிராணிகள் சில நேரங்களில்  உயிரிழக்க நேரிடுவதாகவும், ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வர்த்தக நோக்கில் செயல்படும் மையங்களை ஆய்வு செய்து அதற்கு சரியான  ஒப்புதல் வழங்க வேண்டுமென்றும், இதுபோன்ற மையங்களை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் எனவும் ஆண்டனி கூறியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

48 minutes ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

49 minutes ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

1 hour ago

LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…

2 hours ago

இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…

2 hours ago

INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…

3 hours ago