சென்னையில் விஷ வாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!

Default Image

சென்னையில் விஷ வாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு.

சென்னை மாநகராட்சி, சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் குபேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 15-ந்தேதி கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரிசெய்வதற்கு இறங்க முயன்றபோது, நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போது, தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

 மேலும், இந்தச் சம்பவத்திற்கு காரணமான குபேந்திரன் என்பவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்