இன்று மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்க உத்தரவு

Published by
murugan

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை  இன்றைக்குள் ஒப்படைக்க உத்தரவு. 

10-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா  காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனால், பல தரப்பினர் கொரோனா வைரஸ்  தமிழகம் முழுவதும் பரவி உள்ளபோது தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதுடன் அனைத்து மக்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

மேலும், மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிட அவர்களின் வருகைப் பதிவேட்டினை தலைமையாசிரியர்கள் இன்றைக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by
murugan
Tags: attendance

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

4 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago