நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி சூளகிரி அருகே இரண்டு கிராமங்களில் பள்ளி அருகே செயல்படும் குவாரிகளை கட்டுப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குவாரிலிருந்து வெளியேறும் தூசி கலந்த நச்சுப் புகையால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் கல் குவாரிகளை அனுமதிக்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்குவாரிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா..? என்பதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தல். கல் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், குவாரிகளில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதையும் சோதனை செய்யவும், இந்த பிரச்சனை தொடர்பாக இரு கிராமங்களிலும் ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…