Thangam Thennarasu: அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளதால் தேர்வு முடியும் வரை தமிழகம் முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது.
தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் முன் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டாம். கோடைகால மின் தேவையை எந்த பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ச்சியான மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களுக்கும், மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் 3.52 லட்சம் மாணவர்கள், 4.13 லட்சம் மாணவியர்கள் என மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
இன்று முதல் வரும் மார்ச் 22-ஆம் தேதி வரை + 2 பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கிடையில் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 25-ஆம் தேதி முடிவடைக்கிறது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி முடிவடைக்கிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…