O Panneerselvam [File Image]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக , சின்னம் கொடி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு இருந்தனர். அதில், தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தேர்தலை சந்தித்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இரட்டை சின்னம் கொண்டு படுதோல்வி அடைவது தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வரும் நாடாளுமன்றத்தில் அதிமுக ஓபிஎஸ்) அணி என்ற பெயரில் பொது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…