அதிமுக பொதுக்குழு விவகாரம் .! ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

Default Image

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார். 

தமிழக அரசியலில் மிக முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தற்போது இரு பிளவாக பிளவு பட்டு இருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் இபிஎஸ் தரப்பு ஒருபுறம் என இருவரும் கட்சி பிரச்னையை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

இதனை எதிர்த்து முதலில் ஓபிஎஸ் தரப்பு  உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் ஒற்றை நீதிபதி தலைமை ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.

இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது. இதனை இன்று ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையில், இபிஎஸ் தரப்பு இந்த வழக்கை விசாரிக்கையில் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்