ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் எதிரிகளை விரட்டியடிப்போம், தூரோகிகளை தூள் தூளாக்குவோம். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம் போன்ற உறுதிமொழிகளை இபிஎஸ் மற்றும் தொண்டர்கள் எடுத்துக்கொண்டனர்.
அதே போல, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இபிஎஸ்-ஐ போல, ஓபிஎஸும் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்குவோம் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் சூளுரை மேற்கொண்டனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…