அதிமுகவில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 8ந்தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அவை முன்னவராக தற்போது பதவி வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரவையில் தீர்மானங்களை முன்மொழிவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வது அவை முன்னவரின் பணியாகும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஓகி புயல் பாதிப்பு, ஆளுநரின் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு தயாராகும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அவை முன்னவர் பதவியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…மேலும் தினகரன் குறுக்கிட்டு பேசினால் அவகாசம் வழங்கப்படும் என பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…