பறிபோனது செங்கோட்டையனின் பதவி!பன்னீர்செல்வத்துக்கு போனது பதவி ….

Default Image

அதிமுகவில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 8ந்தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அவை முன்னவராக தற்போது பதவி வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரவையில் தீர்மானங்களை முன்மொழிவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வது அவை முன்னவரின் பணியாகும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஓகி புயல் பாதிப்பு, ஆளுநரின் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு தயாராகும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அவை முன்னவர் பதவியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…மேலும் தினகரன் குறுக்கிட்டு பேசினால் அவகாசம் வழங்கப்படும்  என  பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்