அதிமுக குறித்து பேச ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை – கே.பி.முனுசாமி

Default Image

கே.பி.முனுசாமி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு சசிகலா நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் X தளத்தில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்கின்றனர். அவர் அறிக்கை வெளியாகி இதுவரை எத்தனை தொண்டர்கள் அவரை சந்தித்துள்ளனர்?

அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கோ, அதிமுகவை பற்றி பேசுவதற்கோ ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. மேலும், ஜெயலலிதாவை கடுமையாக விமார்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் தான் இந்த ஒ.பி.எஸ்”, என கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
veera dheera sooran review
TVK Leader Vijay
SRH vs LGS - IPL 2025
riyan parag issue
playoffs ipl
VeeraDheeraSooran