ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி.
தமிழ் மகன் உசேன் அவர்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தர்காவில் அதிமுக இடைக்கால பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துளளர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைச்சாலையில் இருந்த போது மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் 275-க்கும் மேற்பட்ட தர்காக்களில் பிரார்த்தனை செய்ததாகவும் அது நிறைவேறியது என்றும் தற்போது தமிழக முழுவதும் உள்ள புகழ்பெற்ற 75 தர்காக்களை தேர்வு செய்து இபிஎஸ் நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என்றும், நீதிமன்ற நடவடிக்கை பின் அதிமுக பொது குழு கூடி நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…