ஓபிஎஸ்-க்கு தோல்வி என்ற 3 எழுத்து தான் பரிசாக கிடைக்கும் – தமிழ் மகன் உசேன்

Default Image

ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி. 

தமிழ் மகன் உசேன் அவர்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தர்காவில் அதிமுக இடைக்கால பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துளளர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைச்சாலையில் இருந்த போது மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் 275-க்கும் மேற்பட்ட தர்காக்களில் பிரார்த்தனை செய்ததாகவும் அது நிறைவேறியது என்றும் தற்போது தமிழக முழுவதும் உள்ள புகழ்பெற்ற 75 தர்காக்களை தேர்வு செய்து இபிஎஸ் நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என்றும், நீதிமன்ற நடவடிக்கை பின் அதிமுக பொது குழு கூடி நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்