திமுக-வின் ‘பீ’ டீமாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயல்களில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார் – ஜெயக்குமார்

Default Image

ஓபிஎஸ் திமுக-வின் ‘பீ’ டீமாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என ஜெயக்குமார் பேட்டி. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 145 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை வானரகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்-ன் செயலை அதிமுகவினர் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் விரும்பினால் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்; அவரது தரம்தாழ்ந்த நடவடிக்கையே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க காரணம். இதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். ஓபிஎஸ் திமுக-வின் ‘பீ’ டீமாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என  குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்