ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – சசிகலாவின் மனு தள்ளுபடி

Published by
பாலா கலியமூர்த்தி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக கட்சியில் பல்வேறு சலசலப்பு மற்றும் பிளவுகள் ஏற்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் கடந்த 2017 ஆம் இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து தினகரன், சசிகலா ஆகிய இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் திடீரென அம்மா முன்னேற்ற கழகத்தை தினகரன் தொடங்கினார். அந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago