காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

Default Image

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து. 

காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் 72 நாடுகளுக்கு இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் போட்டியிட்டு, பதக்கங்களை வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நெஞ்சம் காமன்வெல்த் விளையாட்டுகளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமல்-சத்யன் இணைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அனைவரும் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களைப் பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்