“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” – சசிகலா ஆதரவாளர்..!

Default Image

“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” என சசிகலா ஆதரவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக தொண்டர்களை கட்சி தலைமையில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறார்.

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சசிகலாவிடம் பேசியதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எடப்பாடி சுரேஷ் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார்.

சசிகலாவின் ஆதரவாளரான இவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது, அதிமுகவிலிருந்து யாரையும் நீக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி தலைமையிடத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்