O Panneerselvam [File Image]
OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி, மேற்கொண்டு வருகிறார். இன்று ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் பிரச்சாரம் செய்து வந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் ஒருவர் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த நபர் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு பின்னர், அந்த நபருக்கு 500 ரூபாய் பணத்தை ஓபிஎஸ் கொடுத்து உள்ளார் என தெரிகிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்பாளர்கள் பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றை கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி.
தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ் ஒரு நபருக்கு 500 ரூபாய் கொடுத்த விவகாரம் அவருக்கு சிக்கலை ஏற்ப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால், ஓபிஎஸ் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…