குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,பாசிச அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர் .நீண்ட கால கனவு திட்டங்களை அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொன்றாக செய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனர்,அவர்கள் நீண்ட கால கனவான ராமர் கோவில் கட்டுவதை அயோத்தியா தீர்ப்பு மூலம் கட்ட உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், ஈழ தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதனை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினர்.வங்கதேசம் , பாகிஸ்தான், வங்க தேசம்ஆகிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது, மதத்தை, நாட்டை கூறுபோடும் செயலாகும். இன்னும் 4 ஆண்டு நாங்கள் ஆட்சியில் இருப்போம் என்று மக்களவையில் பேசும் போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…