அன்பை பரிமாறிக்கொண்ட எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள்… தமிழிசை, தமிழச்சி, ராதிகா சரத்குமார்…

Published by
மணிகண்டன்

Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில் மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக தென் சென்னையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் , பாஜக சார்பில் போட்டியிட வந்த தமிழிசை சவுந்தராஜனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ண்டனர். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் அரவணைத்து நலம் விசாரித்து கொண்டனர்.

அடுத்ததாக, விருதுநகரில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்ய விருதுநகர் அலுவலகம் சென்று இருந்தார். அப்போது, பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் , பாஜக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சரத்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். அடுத்து, விஜய பிரபாகரை பார்த்து சரத்குமார் நலம் விசாரித்து தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.

எதிரெதிர் கட்சியினர் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

6 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

7 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

9 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

10 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

11 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

11 hours ago