வைகை அணை திறப்பு.. 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

Vaigai Dam

சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை  மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால், வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 115 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack