கொரோனாவால் மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மெரினா, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் மெரினா கடற்கரையும் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் கடத்தியது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தது. இதனையடுத்து, கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், டிச.14 அன்று, அதாவது, நாளை முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் மெரினா கடற்கரையைத் திறக்க உள்ளதால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றுவது, மணல் சதுப்பை சமம் செய்து போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அதனை காவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…