புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று அம்மாநில கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க வரக்கூடாது என்று கூறியுள்ளார். மதுபானம் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றி வாங்கி சேலை வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…