இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறுகையில்,நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இது போன்ற முறைகேட்டுக்கு பின்னால் கிரிமினல் கும்பல் உள்ளது. அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய அளவில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட வேண்டும்.
அமித்ஷா அவர்களின் பேட்டியால் மோடி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது. அதுமேலும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை. கீழடியில் 3 கட்ட ஆய்வுகள் முடிவுற்று அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து. கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…