நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்- அமைச்சர் தங்கமணி

Default Image

 இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .

இந்தியா  முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி கூறுகையில், கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்உற்பத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.இன்று முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்