அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று.
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், பெரும்பாலானோருக்கு அவர்கள் நினைத்த தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கது அல்ல, நல்லதும் அல்ல. ஏன்னென்றால் சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்கும் போது தாய்க்கும் ஆபத்து. குழந்தைக்கும் ஆபத்து.
அந்த நேரத்தில் ஆபத்து ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில், அந்த குழந்தையின் வளர்ச்சியில் பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். மேலும், அந்த குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது. அதில் 61% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது என்றும், 100% சுக பிரசவத்திற்காக யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…