அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று.
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், பெரும்பாலானோருக்கு அவர்கள் நினைத்த தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கது அல்ல, நல்லதும் அல்ல. ஏன்னென்றால் சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்கும் போது தாய்க்கும் ஆபத்து. குழந்தைக்கும் ஆபத்து.
அந்த நேரத்தில் ஆபத்து ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில், அந்த குழந்தையின் வளர்ச்சியில் பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். மேலும், அந்த குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது. அதில் 61% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது என்றும், 100% சுக பிரசவத்திற்காக யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…