நாளை கோவிஷூல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும்- சென்னை மாநகராட்சி ..!

Default Image

நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் 200 தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க பல நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிக கவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வருகிறது.

சென்னையில் 40-க்கும் மேற்ப்பட்ட மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் 28,65,576 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை ஒவ்வொரு தடுப்பூசி முகாமில் 200 கோவிஷூல்டு மட்டும் செலுத்தபடும் என  சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்துள்ளது.

நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் 200 கோவிஷூல்டு தடுப்பூசி போடப்படுகிறது. அதில், 70 ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் மீதமுள்ள 130 தடுப்பூசிகள் நேரடியாக சென்று செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்