ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி – அமைச்சர் மூர்த்தி

Published by
பாலா கலியமூர்த்தி

அவனியாபுரம் ஜல்லிகட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகம் நடத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே சமரசம் ஏற்படாததால் அரசே போட்டியை நடத்துகிறது என்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அருகில் உள்ள கிராம மக்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மற்றொரு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலமாக இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே கொரோனா பரவல் மத்தியில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago