2 தொகுதிகளில் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது…!திருநாவுக்கரசர்

Default Image
பாஜகவுடன், திமுக நெருங்கி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விதண்டாவாதம் பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், பாஜகவுடன், திமுக நெருங்கி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விதண்டாவாதம் பேசி வருகிறார். 2 தொகுதிகளில் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது .அதில் திமுக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்