தனியார் பள்ளிகளுக்கான அரசின் உதவிகளை இனி இணையம் வழியாகப்பெறும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் அனுமதிகளை இணையம் வழியாகப்பெறும், இணைய தளத்தினையும்(portal), செயலியையும் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் போன்றவற்றிற்கு அரசின் அனுமதிகளைப் பெற இனி இணையத்திலேயே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளிக்கல்வித்துறையின் https://tnschools.gov.in இணையதளத்தில் இதற்கென புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://tnschools.gov.in/dms/?lang=en என்ற இணைய முகவரி வழியாக தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்குவதற்கான அனுமதி உள்ளிட்ட சில சேவைகளை இணையம் வாயிலாக மேற்கொள்ளமுடியும்.
இதனால் வெளிப்படைத்தன்மையுடன் அரசின் உதவிகளை இனி விரைவில் பெற முடியும், கிட்டத்தட்ட 15,000 தனியார் பள்ளிகள் பயன்பெறும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட முக்கியமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…