ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Published by
மணிகண்டன்

‘நாங்கள் ஏன் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கூடாது?’ என அறிக்கை கேட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.   

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் அண்மை காலமாக அதிக தற்கொலைகள் நடந்து வருகின்றன. அதில் பெரும்பாலும் சிக்குவது படித்த இளைஞர்கள் தான். மேலும் அதிகாரத்தில் இருக்கும் காவலர்கள் கூட இதற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

ஆதலால், தமிழக அரசு இதற்கு தடை போட்டு ஓர் சட்டத்தை இயற்றியது. ஆனால், அதில் சரியான நெறிமுறைகள் இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தது. இதே போல ஆன்லைன் விளையாட்டு தடை தொடர்பாக கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, ‘ நாங்கள் ஏன் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய கூடாது?’ என அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து அதனை 4 வார காலத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதே போல ஆன்லைன் நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் 2 வார காலத்திற்குள் தமிழக அரசும் தடை செய்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 10 வாரத்திற்கு பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago