இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் அவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் நாளை வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி முதல் நாள் பேரவை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 22 சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு பேரவைத் தலைவர் தனபால் வாசித்தார்.
இதன் பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் விதமாக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமைதி காத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும், நாளையும் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை இடம் பெறுகிறது.
இந்நிலையில், 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 2 முக்கிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் பதவியை வரும் ஜூன் வரை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்கிறார்.
இந்த கூட்டுத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டதால் பல விவாதங்கள் நடைபெறும். ஆனால் கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதால் கூட்டுத்தொடரில் விவாதங்கள் அதிகம் நடைபெறாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவரச சட்டத்தை பிறப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…