21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளி கல்வித்துறை!

Published by
Rebekal

21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என  பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் பெரும் தொற்றாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் வருகிற 25-ஆம் தேதி வரையும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்த கூடாது எனவும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நான்கு நாட்களுக்கு நடத்தக்கூடாது எனவும் மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

38 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

1 hour ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

2 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

4 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago