தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, முழுமையான இணையவழி ,பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு, என்ற 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்காக, தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்தநிலையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, 1 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1.30 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும், 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புக்கான நடத்தலாம் என தெரிவித்தது.
மேலும், ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 6 வகுப்புகள் மட்டுமே எடுக்குமாறும், ஒரு வகுப்பு 30 முதல் 45 வகுப்புகள் வரையே நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…