தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று முதல் அதன் விண்ணப்ப பதிவு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வழக்கமாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பப்பதிவை www.gct.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டான்செட் நுழைவு தேர்வில் எம்பிஏ, எம்சிஏ படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கட்ஆப் முறைப்படி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…