பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண் வழங்க திட்டம்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் மூலம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்த நிலையில், தற்போது பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியுள்ளது. இதனை https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண்ணும், செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு வரும் செப் 7-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், அக்.12-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…