எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலமாக, நாளைமுதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும், வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம், கோயம்பேடு மார்க்கெட் வந்தடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…