திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு – விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசம்!

Published by
Rebekal

திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசமடைந்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பல இடங்களில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலத்தடியில் பதிக்கக்கூடிய கச்சா எண்ணெய் குழாய்கள் சில எதிர்பாராத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறி அந்த நிலப் பகுதிகள் பாதிப்படைவது வழக்கம். இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய விளைநிலங்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் இழப்பீடும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல தற்பொழுது திருவாரூர் மாவட்டத்திலுள்ள எருக்காட்டூர் எனும் பகுதியில் விளை நிலத்தின் கீழ் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து அதிலுள்ள கச்சா எண்ணெய் தனசேகரன் எனும் விவசாயிக்கு சொந்தமான விளை நிலம் முழுவதும் பரவியதால் 30 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் பாழாகி உள்ளது. இதனை அடுத்தடுத்து உள்ள பயிர்களுக்கும் எண்ணெய் பரவியதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் நாசம் ஆகியுள்ளது. தகவலறிந்த அவ்விடத்திற்கு வந்த ஓஎன்ஜிசி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட வயலில் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு அதே இடத்தில் இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், அப்பொழுது 5 ஏக்கர் நாசமானதாகவும் ஆனால் நஷ்ட ஈடு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள உடைப்பால் தனக்கு 11 லட்சம்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த இழப்பை தராத பட்சத்தில் நீதிமன்றத்தில் தடை வாங்கி, விவசாய நிலத்தில் உள்ள அனைத்து குழாய்களையும் அப்புறப்படுத்துவோம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

3 minutes ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

56 minutes ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

2 hours ago

விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக…

2 hours ago

200 பேர் பலி! காசாவில் என்ன நடக்கிறது? போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?

காசா : இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை…

3 hours ago

LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!

சென்னை : மகாராஷ்டிரா மாநிலம்நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில்…

3 hours ago