எனக்கு கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும்…!கருணாஸ் ஆவேசம்
எம்.எல்.ஏ பதவிக்கு அரசு கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில், சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை, நோட்டீஸ் வந்தால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.பதவியே வேண்டாம் என்று இருப்பவனுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார் .அதேபோல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயார் என்று அதிரடியாக தெரிவித்தார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் 200% டிடிவி தினகரன் அணியினர் வெற்றிபெறுவர்.மேலும் எம்.எல்.ஏ பதவிக்கு அரசு கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என்றும் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
,