17 வது நாடாளுமன்ற அவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா அவர்கள் நேற்றைய தினம் விடுப்பில் இருந்ததால் அவர்க்கு பதிலாக நீலகிரி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் “ஒரு நாள் சபாநாயகராக” அவையில் செயல்பட்டார்.
சபாநாயகர் இல்லாத சமயங்களில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகராக செயல்பட்டு அவையை நடத்தலாம் என்ற விதியின் படி நேற்று நடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தது. நாடாளுமன்றதில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக சார்பில் ஆ.ராசா அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவையில், கல்லூரி ஆசிரியர் நியமன மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பத்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய முறையில் பதிலளித்து வந்தனர்.
அப்போது, கேரள மாநிலம் மாவேலிக்கரை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் கொடிகுனில் அவர்கள் அவரது தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். உடனே குறுக்கிட்ட, ஆ.ராசா கருத்தை சுருக்கமாக பேசி முடியுங்கள் என்று கூறியுள்ளார். அமைச்சர்கள் அவருக்கு பதில் தாருங்கள் என்று அவையில் பேசியுள்ளார்.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…