ஒரு நாள் சபாநாயகராக நாடாளுமன்றத்தில் செயல்பட்ட ஆ.ராசா !

Published by
Sulai

17 வது நாடாளுமன்ற அவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா அவர்கள் நேற்றைய தினம் விடுப்பில் இருந்ததால் அவர்க்கு பதிலாக நீலகிரி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் “ஒரு நாள் சபாநாயகராக” அவையில் செயல்பட்டார்.

சபாநாயகர் இல்லாத சமயங்களில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகராக செயல்பட்டு அவையை நடத்தலாம் என்ற விதியின் படி நேற்று நடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தது.  நாடாளுமன்றதில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக சார்பில் ஆ.ராசா அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவையில், கல்லூரி ஆசிரியர் நியமன மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பத்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய முறையில் பதிலளித்து வந்தனர்.

அப்போது, கேரள மாநிலம் மாவேலிக்கரை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் கொடிகுனில் அவர்கள் அவரது தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். உடனே குறுக்கிட்ட, ஆ.ராசா கருத்தை சுருக்கமாக பேசி முடியுங்கள் என்று கூறியுள்ளார். அமைச்சர்கள் அவருக்கு பதில் தாருங்கள் என்று அவையில் பேசியுள்ளார்.

Published by
Sulai

Recent Posts

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

27 minutes ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

56 minutes ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

1 hour ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

2 hours ago

”அப்பா.. இசை வந்து இருக்கேன்” தந்தை குமரி அனந்தனின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை.!

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…

2 hours ago

டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!

டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…

2 hours ago